search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீன்பிடி தொழில் பாதிப்பு"

    • மீன்கள் பிடிக்கப்பட்டு குத்தகைதாரர் விற்பனை செய்து வருகிறார். கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவக்காற்றின் வேகம் அதிகரித்து வருகிறது.
    • ஒரு டன் வரை மீன்கள் கிடைத்த நிலையில் தற்போது 300 முதல் 400 கிலோ வரை மட்டுமே மீன்கள் வரத்து உள்ளதாக குத்தகைதாரர் தெரிவிக்கின்றார்.

    ஆண்டிப்பட்டி:

    ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகைஅணையில் மீன்வளத்துறை மூலம் மீன்கள் பிடிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தது. கடந்த மார்ச் மாதம் முதல் அணையில் மீன்பிடிக்கும் உரிமத்தை தனியாருக்கு குத்தகைக்கு விட்டனர்.

    இதனால் ஏற்கனவே மீன்பிடி தொழிலில் ஈடுபட்டவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்களை சமாதானம் செய்து தற்போது அவர்கள் மூலமாகவே மீன்கள் பிடிக்கப்பட்டு குத்தகைதாரர் விற்பனை செய்து வருகிறார். கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவக்காற்றின் வேகம் அதிகரித்து வருகிறது.

    காற்றின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் பரிசலில் செல்ல மீனவர்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். வழக்கமாக 65 மீன்பிடி பரிசலில் சென்று மீன்பிடிப்பார்கள். ஆனால் தற்போது 30 பரிசல்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. ஒரு டன் வரை மீன்கள் கிடைத்த நிலையில் தற்போது 300 முதல் 400 கிலோ வரை மட்டுமே மீன்கள் வரத்து உள்ளதாக குத்தகைதாரர் தெரிவிக்கின்றார்.

    காற்றின்வேகம் குறைந்த பின்பு அதிகளவில் மீன்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ×